பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Friday, June 29, 2012

தமிழிலக்கியங்களில் கண்கள் - பன்முகப் பார்வை




  

மதுரை யாதவர் கல்லூரி மற்றும் காரைக்குடி தமிழ் சக்தி ஆய்வுமன்றம் மற்றும் சிவகாசி பட்டாசுநகர் அரிமா சங்கமும் இணைந்து நடத்திய ஒரு நாள் கருத்தங்கம். இக்கருத்தரங்கம் ‘‘தமிழிலக்கியங்களில் கண்கள் - பன்முகப் பார்வை’’ எனும் தலைப்பில் அமைந்திருந்தது. இக்கருத்தரங்கினை சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர். சோ.முத்தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைத்திருந்தார். இக்கருத்தரங்கில் சுமார் 200 கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப் பட்டது. மேலும், மறைந்த தமிழறிஞர். இரா.பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய கதிர்க் கடவுள் நூலும், வாழக் எம்மான் நீ (முனைவர். முத்துலட்சுமி முதல்வர், காந்திய கல்லூரி) என்னும் காந்திய நூலும் வெளியிடப்பட்டது. இதில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் க.ப.அறவாணன் மற்றும் பல்வேறு தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

 

No comments:

Post a Comment